Saturday, November 13, 2010

பசி... Pasi dont waste food

Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category: |


குடல்கள் கதறக்
கண்கள் இருட்ட;
செவி புடைக்க;
பெயர் சூட்டு விழா
பசிக்கு!

குடைச்சல் கொடுக்கும்
குடலுக்கு;
துவண்டுப் போகும் எங்கள்
தோள்கள்;
நிமிர முடியா முதுகெலும்பால்
குனிந்து போகும் எங்கள் தலை!

மிச்சம் மீதியை எச்சிலாக்கி
எரிச்சல் அடைந்து
தூக்கி எறியும் சமூகம்!

மிச்ச மீதியையும்
மச்சம் என நினைத்துப்
புன்னகை பூக்கும்
எங்கள் வயிறு!

உணவைக் கொட்டும் முன்னே
சற்றே சுற்றிப் பாருங்கள்;
எனைப்போல ஏராளம் உண்டு;

உங்களுக்குக் கெட்டுப் போனவையை 
நாங்கள் ஏற்றுக்கொள்வோம்
தாராளம் என்று!

கிடைக்கிற உணவிற்கு
மனம் குளிர்ந்து
நன்றி நவிலுங்கள்
மறையோனுக்கு!

Currently have 1 comments:

  1. மிகவும் அருமையான ஆழமான வரிகள்


Leave a Reply