Saturday, August 25, 2012

உன் இதழ்கள்!

Posted by K. Ezhil Kumar | Saturday, August 25, 2012 | Category: |

‘எனக்கு உன்னைப்போல


கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.

எனக்கும்தான் உன்னைப்போல

கவிதை பேசத் தெரியாது!

*

கல்லூரியில் கூட

யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.

காதலில் மட்டும்

உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.

*

கவிதையெழுதுவதில்

என் விரல்களை வென்றுவிடுகின்றன

உன் இதழ்கள்!

*

நீ கையொப்பமிட்டு தரும்

எந்தப் புத்தகமும்

கவிதைப் புத்தகம்தான்!

*

இப்படி வாசிக்க…

ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.

நேசிக்க…நீ மட்டும்தான்!


From: Mani Nila

Currently have 0 comments:


Leave a Reply